நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 951 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இதுவரையான கலப்பகுதியில் மேலும் 04 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 07 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொற்றில் இருந்தும் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2805 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த நோயாளிகளில் தற்போது 134 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை 65 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.