பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு ஏற்பட்டது.
இந்த நிலையில் எஸ்பிபி உடல் நிலை மிகவும் மோசமடைந்ததாக நேற்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி எஸ்பிபி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து வெங்கட்பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சரியாக 1.04 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த எஸ்பிபிக்கு வயது 75 ஆகும், அவரின் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை