கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு தனியாக சென்றவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர் 36 வயதான குறித்த நபர் எனவும் சிலாபத்திலுள்ள தன்னுடைய வீட்டில் வைத்தே, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த 23ஆம் திகதியன்று கொழும்பில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றுள்ளார் எனவும் அதன் பின்னர் புறக்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் ஆகியவற்று அன்றையதினம் சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், செப்டெம்பர் 30ஆம் திகதியன்று நுவரெலியாவுக்கும் சென்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.