ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மினுவாங்கொட பிரன்டிக்ஸ் நிறுவன பணியாளர் ஒருவரின் உறவினருடன், தனியார் விடுதியில் தங்கியிருந்த காரணத்தினால் அவருக்கு பாணாந்துறை மருத்துவமனையில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த யுவதி கடந்த வாரம் பாணாந்துறை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளதால் பல்கலைக்கழக சமூகம் அச்சமடைய தேவையில்லை என தெரிவிக்கப்படுகிறது.