தெலங்கானாவில் ட்ரம்புக்கு சிலை வைத்து வணங்கி வந்த நபர் நெஞ்சுவலியின் காரணமாக திடீரென்று உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்தவர் புஸ்சா கிருஷ்ணா. விவசாயியான இவர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தீவிர ரசிகர் ஆவார். எனவே அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு தனது வீட்டிலேயே 6 அடி உயர சிலை அமைத்து வழிபட்டு வந்தார்.
அதிபர் ட்ரம்பை கடவுளாக கருதிய அவர், ட்ரம்பின் சிலையை புஸ்சா கிருஷ்ணா தினமும் வழிபட்டார். சிலையின் நெற்றியில் பொட்டு வைத்து, மாலை அணிவிப்பார். அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டுவார். அப்போது, ‘ஜெய் ஜெய் டிரம்ப்’ என்று மந்திரம் உச்சரிப்பது வழக்கம்.
ஒவ்வொரு வருடமும் ட்ரம்பின் பிறந்தநாளின்போது மாலை அணவித்து பூஜைகள் செய்து விமர்சையாக கொண்டாடுவார். ட்ரம்பின் இந்திய வருகையின்போதும் புதிய பேனர் அச்சடித்து அதனை திருவிழா போலக் கொண்டாடினர்.
இந்தநிலையில், திடீரென்று புஸ்சா கிருஷ்ணா நெஞ்சு வலியின் காரணமாக மரணமடைந்தார். அவர், மரணமடைந்து செய்தி அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.