கொரோனா தொற்றிலிருந்து மக்கள் அனைவரையும் நாம் காப்பாற்றியிருக்கிறோம் என்ற உண்மையானது எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவு தின கொண்டாட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
கொரோனா வைரஸால் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் நல்ல உடல் ஆரோக்கியமுடன் மக்கள் இருப்பதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
உலகம் முழுவதற்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தி வரும் இப்பெருந்தொற்றில் இருந்து எம்முடைய மக்கள் அனைவரையும் காப்பாற்றியிருக்கிறோம்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து மக்களின் ஆரோக்கிய தோற்றத்தினை காணும்பொழுது, நன்றி கூறுவதைத் தவிர என்னிடம் வேறு வார்த்தைகள் கிடையாது.
வடகொரிய மக்கள் அவர்களாகவே மிகப் பெரிய வெற்றியை சாதித்திருக்கிறார்கள்.
வடகொரியாவின் அண்டை நாடான சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்டு பின் பல நாடுகளிலும் தீவிர பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகி வரும் சூழலில், எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்புகள் இல்லை என்பது கவனத்தில் கொள்ளக்கூடியதென அவர் தெரிவித்துள்ளார்.