மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் நூதனமான முறையில் இயங்கிவந்த சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் நேற்று (22) இரவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்து பெருமளவான மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது 170 மில்லி லீற்றர் அளவு கொண்ட 750 மதுபான போத்தல்களும், பெரியளவிலான 48 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டது.
அத்துடன் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.