ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுவிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் வெளியேற்றப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் இருந்த இரட்டைக் குடியுரிமை சரத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஷாரப்பை வெளியேற்ற வேண்டும் என மரிக்கார் வலியுறுத்தினார்.
இதன்போது ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியதன் பிரகாரம், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் முஷாரப் வெளியேற்றப்பட்டார்.