கிளிநொச்சி மாவட்டம் , பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லையடிப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாள்கள் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
ஏ – 9 வீதிக்கு அருகாமையில் மின்சார இணைப்புக்களுக்காக அடுக்கப்பட்டிருந்த மின் கம்பங்களுக்கு இடையில் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் குறித்த வாள்கள் மீட்க்பட்டுள்ளன.
அவை எதற்காக அங்கு மறைத்து வைக்கப்பட்டன? யார் அதனை மறைத்து வைத்தார்கள்? என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் அண்மையில்தான் குறித்த மின் கம்பங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன என்று பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.