இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட 22ஆவது மரணம் தொடர்பில் முமுமையான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் இன்று மாலை ஏழு மணிக்கு குறித்த அறிவிப்பு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு – 15 பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலையில் இரு பெண்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணொருவர் 22ஆவது நபராக உயிரிழந்திருந்தார்.
அவர் மரணம் தொடர்பில் மேற்கொண்ட பரிசோதனைகளை அடுத்து அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.