கொரோனா வைரஸ் காரணமாக தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் இறுதிச்சடங்கில் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
சுகாதார ஆலோசனைகளை பொருட்படுத்தாமல் இவ்வாறு இறுதிச்சடங்கு இடம்பெற்றுள்ளது.
பானந்துரையில் உள்ள பொன்சேகா மாவத்தை பகுதியில் வசிப்பவர்கள் பலர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.